’காத்துவாக்குல ரெண்டு காதல்: அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!


’காத்துவாக்குல ரெண்டு காதல்: அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா!


விஜய் சேதுபதி நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சமந்தா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் .

நடிகை சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களையும் பகிருந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன .

ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் கதியா என்ற கேரக்டரில் சமந்தாவும், கண்மணி என்ற கேரக்டரில் நயன்தாராவும் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும்போது இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகி விட்டனர் என்பதும் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களது நன்றியை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Spread the love

Comments

Popular posts from this blog

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 37 ஆண்டு சிறை

சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்! 90 வயது மூதாட்டியின் முகத்தில் மனித மலம் பூசிய கொடூர மனிதன்..!1835389002

Moodboard Le design culinaire ou food design est sur tous les fronts